10. நாடுகாண் காதை

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன



177
உரை
177

        செறிவன் - எல்லா வுயிர்கட்கும் இதனாயுள்ளவன் ; சலியாதவன் என்றுமாம்.

        சினேந்திரன் - எண்வகை வினைகளையும் வென்றோன் ;

        எண்வகை வினைகளாவன : ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென இவை.

        சித்தன் - செயத் தகுவனவற்றைச் செய்து முடித்தோன் ;

        கன்மங்களைக் கழுவினோன் என உரைப்பாருமுளர்.

        பகவன் - முக்கால வுணர்ச்சியுடையோன் ;