10. நாடுகாண் காதை


அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி



187
உரை
187

       அங்கம் பயந்தோன் - அங்காகமத்தை அருளினவன்; அருகன் - போற்றத்தக்கான்; அருள்முனி - எல்லா வுயிரிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன் ;

       அங்காகமம் பன்னிரண்டு வகையினை யுடைத்து எனவும், அவை, ஆசாராங்கம், சூத்திர கிருதாங்கம், ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப் பிரஜ்ஞப்த்யங்கம், ஞாத்ருகதாங்கம், உபாஸ காத்தியயனாங்கம், அந்தக் கிருத தசாங்கம், அநுத்தரோபபாதிக தசாங்கம், பிரச்சிநவியாகர ணாங்கம், விபாக சூத்திராங்கம், திருஷ்டிவாதாங்கம் என்பன வெனவும் கூறுவர்.