10. நாடுகாண் காதை

200

அருளறம் பூண்டோன் றிருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது



200
உரை
201

       அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் பொருள் இல் யாக்கை பூமியிற் பொருந்தாது - எனது பயனில்லா இவ் வுடல் அருளையும் அறத்தினையும் மேற் கொண்டோனுடைய திருவுடலத்திற்கல்லது பிறிதொன்றற்குப் பூமியிற் பொருந்தாது ;

       அருளறம் பூண்டோன் என்பதற்கு அருளினால் அறம் பூண்டோன் எனலு மமையும். பூமியிற் பொருந்தலாவது நிலத்து வீழ்ந்திறைஞ்சுதல்.