|
|
வெண்பா
காலை யரும்பி மலருங் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ--வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார் |
|
காலை அரும்பி மலரும் கதிரவனும் - காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும்,
மாலை மதியமும் போல் - மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ
- வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு,
மாலைப் புகழால் அமைந்த புகார் - மாலையெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம்
பட்டினம்.
ஆல் - ஓடு. புகார் வாழியரோ என்க.
புகார்க்காண்டம்
முற்றிற்று. |
|