திங்கள் மூன்று அடுக்கிய திரு முக்
குடைக்கீழ் - மூன்று திங்களை அடுக்கி வைத்தாற் போலும் அழகிய முக்குடையின் கீழ்,
செங்கதிர் ஞாயிற்றுத் திகழ்ஒளி சிறந்து - சிவந்த கதிர்களை யுடைய ஞாயிற்றின்
ஒளியினும் விளங்கும் ஒளி மிக, கோதை தாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த - மாலையாக
மலர்ந்து தொங்கும் அசோகின் கொழுவிய நிழற்கண் எழுந்தருளிய, ஆதிஇல் தோற்றத்து
அறிவனை வணங்கி - தன்னினும் ஒன்று முதற்கண் இல்லாத தோற்றத்தினையுடைய அருகதேவனைத்
தொழுது ;
திங்கள்
மூன்றடுக்கிய என்பதற்குத் திங்கள் முதலிய மூன்றடுக் கிய எனலுமாம். முக்குடை - சந்திராதித்தியம்,
நித்தியவினோதம், சகலபாசனம். சிறந்து - சிறப்ப எனத் திரிக்க. கடவுட்டன்மை யால்
அப் பிண்டி எஞ்ஞான்றும் மாலையாகப் பூத்தலின் கோதை தாழ் பிண்டி என்றார் என்க.
ஆதியில் தோற்றத்து அறிவனென்றது தனக்கொரு முதல்வன் இல்லாதவன் என்றவாறு. இனி,
தோற்றத் தின்கண் முதல் இல்லாதவ னெனலுமாம் ; பிறப்பிலான் என்றபடி. அறிவன் -
உறையூரிலருகன்.
|