1. காடுகாண் காதை

35





40
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்

திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்


35
உரை
40

       நீல மேகம் நெடும் பொற் குன்றத்து -- கரிய மேகம் உயர்ந்த பொன்மலையினிடத்து, பால் விரிந்து அகலாது படிந்தது போல - பக்கங்களில் விரிந்து மிகாமல் படிந்த தன்மையை ஒப்ப, ஆயிரம் விரிந்து எழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளி - பரப்பி எழுந்த ஆயிரந்தலையினையுடைய அரிய வலி பெற்ற பாம்பணையாகிய பள்ளிமீது, பலர் தொழுது ஏத்த - பலரும் வணங்கிப் போற்ற, விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி - விரிந்த அலைகளையுடைய மிகப் பெரிய காவிரியாற்
றிடைக்குறையில், திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பி யுறையும் மார்பையுடையோன் கிடந்த கோலத்தினையும் ;

       நீல மேகம் படிந்ததுபோல வென்க. நீல மேகமும் பொற் குன்றமும் திருமாலுக்கும் அனந்தனுக்கும் உவமை. 1"மின்னவிர் சுடர்மணி யாயிரம் விரித்த, கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கை" என்பது பரிபாடல்.


1. பரி. 13 ; 7--12.