தென்னவன்
நாட்டுச் சிறப்பும் செய்கையும் - பாண்டியனுடைய நாட்டின் சிறப்பினையும் அவன் கொடை
முதலிய செய்கையினையும், கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின் வாழ்த்தி வந்திருந்தேன்
- கண்கள் குளிரும் வண்ணம் கண்டேன் ஆகலான் அவனை நாவால் வாழ்த்தி வந்திருந்தேன்;
இது என் வரவு என - இதுவே எனது வருகையின் காரணமாகும் என்று, தீத்திறம் புரிந்தோன்
செப்பக் கேட்டு - முத்தீயின் திறத்தில் உள்ளம் விரும்பியோனாகிய அம் மறையோன்
கூறக் கேட்டு;
|