1. காடுகாண் காதை

58 மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீயெனக் கோவலற் குரைக்கும்


58
உரை
59

       மா மறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீ என - கோவலன் அவனை நோக்கிப் பெரிய வேத முதல்வனே மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறியினை நீ கூறுவாயாக என்று கேட்க, கோவலற்கு உரைக்கும் -- அம்மறையோன் அவற்கு இதனைக் கூறுவான் ;

       
மறையோன் பாண்டி நாட்டினைக் கண்டு ஆண்டு நின்றும் போந்தன னென்பதறிந்தமையால் அவனை மதுரைக்கேகும் நெறி கேட்டனனென்க.