1. காடுகாண் காதை




90
அவ்வழிப் படரீ ராயி னிடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்
பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு


87
உரை
92

       அவ்வழிப் படரீராயின் - அவ் வலப்பக்கத்து நெறியிற் செல்லீராயின், இடத்து - இடப்பக்கத்தே, செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும் - சிறகினையுடைய வண்டுகள் செவ்வழிப் பண்ணைப்போல் பாடுகின்ற, தடம் தாழ் வயலொடு தண்பூங்காவொடு - குளங்களோடும் தாழ்ந்த வயல்களோடும் குளிர்ந்த பூஞ்சோலையோடும், கடம் பல கிடந்த காடு உடன் கழி்ந்து - அருஞ்சுரங்கள் பலவும் இடைக்கிடந்த காட்டு நெறியையுங் கடந்து, திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின் - அழகர் திருமலைக்கண் செல்குவீராயின், பெருமால் கெடுக்கும் பிலம் உண்டு - அங்கே மிக்க மயக்கத்தினைக் கெடுக்கும் பிலத்து நெறி ஒன்று உண்டு ;

       
செவ்வழி - செவ்வழியாழ் ; முல்லை நிலத்திற்குரிய பண். கடம் - பாலை நிலவழி. திருமால் குன்றம் - திருமாலிருஞ் சோலைமலை.