விண்ணோர்
ஏத்தும் வியத்தகு மரபின் - தேவர்களால் ஏத்தப்படும் வியக்கத்தக்க முறைமையினையுடைய,
புண்ணிய சரவணம் பவகாரணியோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி-
புண்ணியசரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் பெயர் யாண்டும் பரக்கப்பெற்று, விட்டு
நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்று உள - இடையறாத சிறப்பினை
யுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற விளக்கம் அமைந்த மூன்று பொய்கைகள் உள்ளன
;
ஆங்கு
- அவற்றுள் ;
|