புண்ணிய
சரவணம் பொருந்துவிர் ஆயின் - புண்ணிய சரவணம் என்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின்,
விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - விண்ணவர் தலைவனாகிய இந்திரனாற் செய்யப்பெற்ற
சிறந்த ஐந்திரம் என்னும் இலக் கணத்தை அறிவீர் ;
பொருந்துதல்
- ஆடுதல். எய்துதல் - உணர்தல். விண்ணவர் கோமான் விழுநூல் - ஐந்திரம். ஐந்திரம்
இந்திரனாற் செய்யப்பட்டது என்னும்பொருட்டு. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்"
என்பது தொல்காப்பியப் பாயிரம்.
|