1. காடுகாண் காதை

105 ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது
சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால்


105
உரை
107

       ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோற் றொழுது - மிகவுயர்ந்த அம் மலைக்கண் எழுந்தருளிய மேலோனை வணங்கி, சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து - உள்ளத்தின்கண் அவனுடைய சிவந்த திருவடிகளை எண்ணி, வந்தனை - துதித்தலோடு, மும்முறை மலைவலஞ் செய்தால் - அம் மலையை மூன்று முறை வலம் வந்தால் ;

       
அத்து - சாரியை. உயர்ந்தோன் - திருமால். வைத்தல் - எண்ணுதல். வந்தனை - ஈண்டுப் போற்றல்.