கதவம்
திறந்து அவள் காட்டிய நன்னெறி - உரைப் பின் அவள் கதவினைத் திறந்து காட்டிய நல்ல
வழிக்கண், புதவம் பல உள போகு இடை கழியன - நீண்ட இடைகழியிடத்தன
வாகிய வாயில்கள் பல வுள்ளன ; ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு- அவற்றைக் கழிந்து செல்லின்
இரட்டைக் கதவினையுடைய வாயில் ஒன்றுளது, அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
- அதற்குமேல் வட்டிகையாக எழுதிய பொலிவுற்ற கொடிபோல்வாள் வந்து எதிர்ப்பட்டு,
இறுதிஇல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் - முடிவிலா இன்பம் யாது அதனை எனக்கு இவ்
விடத்து உரைப்பீராயின், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் - நீவிர் இம்
முப்பொரு
ளினும் விரும்பிய பொருளினைப் பெறுகுவீர் என்று கூறுவாள் ;
புதவம்
- கதவு; ஈண்டு வாயில். போகு - நெடுமை. பூங்கொடி - பூங்கொடி போல்வாள். வட்டிகை
- சித்திரம். இனி வட்டிகை என்பதற்கு எழுதுகோல் எனப் பொருள் கொண்டு எழுதுகோலால்
எழுதிய எனலுமாம். இறுதியில் இன்பம் உரைத்தலாவது இறுதியில்லா இன்பம் யாதென வுரைத்தல்.
இறுதி இல் இன்பம்-வீடு. போலும் - ஒப்பில் போலி. பேணிய பொருள் என்பதற்குப் புகழ்,
அறம், வீடு என்னும் மூன்றனுள் விரும்பிய பொருள் என்க.
|