பின்றையும் அவ்வழிப் பெயர்ந்து
செல் வழிநாள் - பின்னரும் தங்கி அந் நெறியிலே மீண்டும் செல்கின்ற பின்னாளில்,
கருந்தடங்கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்து செல் வருத்தத்து
வழிமருங்கு இருப்ப - கரிய பெரிய கண்ணினையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளும் வழிச் சென்ற
வருத்தத்தினால் வழியின் பக்கத்து இருக்க, இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
- முன்னர்க் கூறிய இடைவழியிற் கிடந்த செலவினைக் கொண்ட இடத்திலே, புடைநெறிப்
போய் ஓர் பொய்கையிற் சென்று நீர் நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்ப - பக்க
வழியிலே சென்று ஓர் பொய்கைக் கரைக்கண் போய் நீரை உண்ணுதலை விரும்பி அவ் விருப்பத்தானே
பெரிய துறையிடத்துக் கோவலன் நிற்க. ;
பின்றை - பின்னை. வழிநாள் -
மறுநாள். வழி. இடை நெறி என்பதனை நெறியிடை என்னலும் பொருந்தும்.
|