வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - மன்னர் யாரினும் பெரிய தகையை யுடையோனாகிய எம் மன்னன் வாழ்வானாக, ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க - பல்லூழி இவ் வுலகினை அவனே காப்பானாக ; தொறும் என்பது தொறுவென நின்றது.