1. காடுகாண் காதை

176




வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று


176
உரை
179

        வாசமாலையின் எழுதிய மாற்றம் தீது இலேன் - மணம் பொருந்திய மாலையின்கண் எழுதிய மொழியில் தவறுதலுடையேன் அல்லேன், பிழை மொழி செப்பினை - நீ தவறுடைய
மொழிகளைக் கூறினை போலும், ஆதலிற் கோவலன் செய்தான் கொடுமை என்று - அதனானனறே கோவலன் எனக்குக் கொடுமை செய்தான் என்று கூறி, என்முன் மாதவி மயங்கி வான் துயர் உற்று - மாதவி என் முன்பு மயங்கி வீழ்ந்து மிக்க துயரத்தை அடைந்து ;

       
இங்குக் கூறிய வரலாற்றினை வேனிற் காதையிற் காண்க. கோவலன் கொடுமை செய்தான் என்றது தன்னை விட்டுப் பிரிந்தமையை.