1. காடுகாண் காதை




195




200
மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென
வியத்தகு மறையோன் விளம்பின னாதலின்
வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ்
ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக்
கோவலன் நாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
என்திறம் உரையா தேகென் றேகத


192
உரை
200

        மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு என - அறிவினை மயக்கும் தெய்வம் இவ் வலிய காட்டின்கண் உண்டென்று, வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் - வியக்கத்தக்க
அவ் வேதியன் கூறினன் ஆகலான், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - வஞ்சத்தைப் போக்கும் மந்திரத்தினால், இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவென் யான் என - இந்த ஐவகைப்பட்ட சிலவாகிய கூந்தலையுடையாளின் உண்மையை யான் அறிகுவேன் என்று கருதி, கோவலன் நாவிற் கூறிய மந்திரம் - கோவலன் தனது நாவினாற் சொல்லிய மந்திரம், பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின் - பாய்ந்து செல்லும் கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் மந்திரம் ஆகலான் அஞ்சி, வனசாரிணியான் மயக்கம் செய்தேன் - யான் இவ் வனத்தின்கண் திரியும் இயக்கி, நினக்கு மயக்கம் செய்ய எண்ணினேன், புனமயிற்சாயற்கும் - கானமயில் போலும் மென்மையை உடைய நின்
மனைவிக்கும், புண்ணிய முதல்விக்கும் - தவநெறி நிற்கும் கவுந்தியடிகட்கும், என் திறம் உரையாது ஏகு என்று ஏக - யான் செய்த இப் பிழையினைக் கூறாது செல்கவென்று சொல்லித்தானுஞ்
செல்ல ;

       
மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டுண்டென என்றது, 1"ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்" என முன் கூறியதனை. வியத்தகு மறையோன் என்றது பலவற்றையும் அறிந்து கூறிய சதுரப் பாட்டினால். வஞ்சம் - வஞ்சவுரு. ஓதியை - ஓதியையுடையாள் யாவளென்பதனை. கூறினன் ; அங்ஙனங் கூறிய மந்திரம் என்க. வனசாரிணி- வனத்திற் சரிப்பவள். தவத்தினும் கற்புச் சிறந்ததாகலான் கண்ணகியை முற்கூறினார். இவ் விருவரும் சாயலும் அறனும் உடையாரேனும் தவறு கண்ட வழி வெகுண்டு சபிப்பர் என்று கருதி அவர்க்கு உரையற்கவென இரந்தாள்.


1. சிலப். 11: 144.