முடிவளை
உடைத்தோன் முதல்வன் சென்னி என்று - இவன் நம் முதல்வனது சென்னி முடியிலே வளையை
உடைத் தோன் என்று, இடி உடைப் பெருமழை எய்தாது ஏக - இடியினையுடைய பெரிய மழை பெய்தல்
எய்தாது ஏகிற்றாக, பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப - தப்பாத விளையுளாகிய மிக்க
வளஞ்சுரக்கும் வண்ணம், மழை பிணித்து ஆண்ட மன்னவன்
வாழ்கென - அம் மழையினை விலங்கிட்டு ஆண்ட மன்னவன் வாழ்வானாக என, தீது தீர் சிறப்பின்
தென்னனை வாழ்த்தி - குற்றம் நீங்கிய பெருமையினையுடைய பாண்டியன் வாழ்த்தி, மாமுது
மறையோன் வந்திருந்தோனை - வந்து தங்கியிருந்த சிறந்த முதிய அந்தணனை ;
முடியில் வளையை உடைத்தென்றது முடியின்
ஐந்துறுப்புக் களுள் ஒன்றாய கிம்புரியை உடைத்து என்றவாறு. முடியின் ஐந்துறுப் புக்களை
1"தாம முகுடம் பதுமங் கோடகம், கிம்புரி
முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" என்பதனானறிக. இனி, முதல்வன் முடியை வளை யாலுடைத்தோனெனலுமாம்
; இதனை 2"காய்சின மடங்கலன்னான் ...
வீரன்" எனவும், 3"இன்னன பேசி ... அடித்தான்"
எனவும் வரூஉம் இரு திருவிளையாடற் புராணச் செய்யுளானும் உணர்க். 4"வச்சிரத்
தடக்கை யமரர் கோமான், உச்சிப் பொன் முடி யொளிவளை யுடைத்தகை" என்பர் பின்னும்.
பிழையா விளையுள் - வளந்தருதல் தப்பாத விளைநிலமுமாம். வந்திருந்தோன் - வினைப்பெயர்.
வேல்விடுத்துக் கடலை வற்றச் செய்ததும், இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டதும், இந்திரன்
முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத் தளையிட்டதும் உக்கிரவன்மன் (உக்கிர குமார
பாண்டியன்) செயல்களாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும்.
1. திவா.
7-வது 2.
பரஞ். திருவிளை. இந்திரன்முடி. 53
3. திருவால. திருவிளை. இந்திரன்முடி 4. சிலப்.
23; 50-1.
|