2. வேட்டுவ வரி



35

பாவையுங் கிளியுந் தூவி யஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி



33
உரை
35

        பாவையும் - மதனப்பாவை முதலியனவும், கிளியும் தூவி அம் சிறைக் கானக் கோழியும் நீல் நிற மஞ்ஞையும் - கிளியும் சிறு மயிரினையுடைய அழகிய சிறகினையுடைய காட்டுக் கோழியும் நீலநிறம் பொருந்திய மயிலும், பந்தும் கழங்கும் தந்தனர் பரசி - பந்தும் கழங்கும் ஆகிய இவற்றைக் கொடுத்துத் துதித்து ;

        தூவி - சிறகின் மயிர் ; சூட்டும் ஆம். தந்தனர் - முற்றெச்சம்.