2. வேட்டுவ வரி



பவண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் எந்தினர் பின்வர



36
உரை
39

        வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தமும் - வண்ணக்குழம்பும் பொற்பொடியும் குளிர்ந்த மணமுள்ள சந்தனமும், புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும் எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், பூவும் புகையும் மேவிய விரையும் - மலர்களும் புகையும் விரும்பிய மணப்பொருள்களும் ஆய இவற்றை, ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர - பணி செய்யும் மறப்பெண்கள் தாங்கினராய்ப் பின்னே செல்ல ;

        வண்ணம் - தோள் முதலியவற்றில் நிறமெழுதுங் குழம்பு. புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு - நிணம். மடை - சோறு. ஏந்தினர், முற்றெச்சம்.