2. வேட்டுவ வரி

45




50

இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்
கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப்



45
உரை
50

        இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - தம்முள் ஒத்த மலர்போலும் சிறிய அடிகள் வருந்தினவளாய்த் துன்புற்றுத் தன் கணவனொடு தங்கி யிருந்த மணம் நிறைந்த கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டி, இவளோ - இப் பெண், கொங்கச் செல்வி - கொங்கு நாட்டிற்குச் செல்வமாயுள்ளவள், குடமலை யாட்டி - குடமலை நாட்டினையாளும் செல்வி, தென்தமிழ்ப் பாவை - தென்றமிழ் நாட்டின் பாவை, செய்த தவக் கொழுந்து - உலகோர் செய்த தவத்தின் கொழுந்து போல்வாள், ஒரு மா மணியாய் உலகிற்கு ஓங்கிய திரு மா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப - இவ்வுலகிற்கு ஒப்பற்ற முழு மாணிக்கம் போன்று உயர்ந்த அழகிய பெண்மணி என்று சாலினி தெய்வத்தன்மை அடைந்து இவளை மிகுத்துக் கூற ;

        சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா னறிக.