தெய்வம்
உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப - மறவர் வியக்கும்
வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி - முள்வேலி இடப்
பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப்
பெயர்த்து ஆடி ;
கானவர் வியப்ப ஆடி என்க. வேலியை
உடைய ஊர் எயினர் கூட்டுண்ணுமூர் என இயைக்க. கூட்டுண்டல் - கவர்ந்த பொருளைச் சேர்ந்துண்டல்.
நடுவூர் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை.
|