நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப் பூட்டி நெடிய மேருவாகிய வில்லை வளைத்தவள்; அரவு நாண் என்பதற்கேற்ப மலை வில் என உரைக்கப்பட்டது. வில்லை வளைத்து நாண் பூட்டியவள் எனப் பிரித்துக் கூட்டுக.