"நாகநாறு ....... முன்றிலே" நாகம் நாறு நரந்தம் நிரந்தன - மணம் நாறும் சுரபுன்னையும்
நாரத்தையும் ஒழுங்கு படவுள்ளன; ஆவும் ஆரமும் ஓங்கின - ஆச்சாவும் சந்தனமும் உயர்ந்து
வளர்ந்தன ; எங்கணும் சேவும் மாவும் செறிந்தன - எவ்விடத்தும் சேமரமும் மாமரமும்
நெருங்கின ; கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே - நெற்றியிற் கண்ணினையுடைய
சிவபெருமானது இடப் பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பலிகொள்ளும் முன்றிலின்கண்
;
பலிமுன்றிலின்கண் நிரந்தன, ஓங்கின,
செறிந்தன எனக் கூட்டுக. பின்வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 'எங்கணும்' என்பதனை
எங்கணும் கூட்டுக. ஆரம் - ஆத்தி எனலும், சே - உழிஞ்சில் எனலும் ஆம். "ஐயுங் கண்ணு
மல்லாப் பொருள் வயின், மெய்யுருபு தொகா விறுதி யான" என்ற விதியால் கண்ணுருபு இறுதியிற்
றொக்கது.
|