2. வேட்டுவ வரி


கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன


12
உரை
13

       கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன - பழங்கடன் கொடாமையின் ஒலியினையுடைய பகைவரது பெரிய ஊர்க் கண்ணே திரண்ட ஆனிரைகள் மிக்கன, வல்வில் எயினர் மன்று பாழ் பட்டன - பகைவரை அழிக்கும் வலிய வில்லினைக் கொண்ட மறவருடைய மன்றுகள் பாழ்பட்டன ;

       கல் - ஒலிக் குறிப்பு. சிறத்தல் - மிகுதல். பட்டது என்பதும் பாடம்.