"மரவம் ...... முன்றிலே" மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன
- வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன;
கொம்பர்மேல் அரவ வண்டு இனம் ஆர்த்து உடன்யாழ் செயும் - அவற்றின் கொம்புகளில்
ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணைபோலப் பாடும்; திருவ மாற்கு இளையாள்
திருமுன்றிலே-திருமாலுக்கு இளையாளுடைய முன்றிலின் கண்;
யாழ்செயும் - யாழின் இசைபோலப்
பாடும். திருவ என்பதன் கண் அ அசை. இவை முன்றிலின்சிறப்பு.
|