"ஐயை திருவின்............குலனும்" ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப் பையரவு
அல்குல் தவம் என்னை கொல்லோ - கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற
இந்த அரவின் படம் போன்ற அல்குலினையுடையாள் செய்த தவம் யாதோ, பையரவு அல்குல்
பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி பிறந்த குடிக்கண்
தோன்றிய அம்பினை எய்யும் வில்லினையுடைய வேடர் குலமே சிறந்த குலம் ;
திரு - அழகு. பை - படம். அரவுப்பை என மாறுக.
|