"ஆனைத்தோல்........நிற்பாய்" ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து -
யானையின் தோலை மேலே போர்த்துப் புலியின் தோலை அரைக்கண் உடுத்து, கானத்து எருமைக்
கருந்தலைமேல் நின்றாயால் - காட்டின்கண் எருமைக் கடாவினது கரிய தலையின் மீது நின்றாய்;
வானோர் வணங்க மறைமேல் மறையாகி - தேவர் யாவரும் வணங்க வேதங்களுக்கு அப்பாற்பட்ட
மறைந்த பொருளாய், ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அறிவின் கொழுந்தாகிச்
சலித்தல் இன்றி யாண்டும் நிலைத்து நிற்பவளே இஃது என்ன மாயமோ ;
வணங்க மறையாகிக் கொழுந்தாய்
நிற்பாய் போர்த்து உடுத்து நின்றாய் இஃதென்ன மாயமோ என்க. பின் வருவனவற்றையும்
இவ்வாறே மாறுக. கானம் என்பதனை எருமைக்கு அடையாக்கினு மமையும். எருமை - சாதிப்பெயர்.
|