"வரிவளைக்கை.....நிற்பாய்"
வரிவளைக்கை வாள் ஏந்தி மா மயிடற் செற்று - வரிகள் பொருந்திய வளையணிந்த கையில்
வாளைத் தாங்கிப் பெரிய மகிடாசுரனை அழித்து, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல்
நின்றாயால் - கரிய முறுக்குண்ட கொம்பினையுடைய கலைமான்மீது நின்றாய்; அரி அரன்
பூமே லோன் அகமலர்மேல் மன்னும் - திருமாலும் சிவபிரானும் நான் முகனும் ஆகிய இவர்களுடைய
உள்ளத் தாமரையில் நிலைபெற்றிருக்கும், விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய்
- விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளிவிடும் விளக்கமாகி நிற்பவளே, இஃதென்ன மாயமோ
;
அகமலர்மேல் மன்னும் விளக்காகி நிற்பாய் என்க.
|