2. வேட்டுவ வரி

9

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய் ;



9
உரை
9

        "சங்கமும்.....நிற்பாய்" சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி - சங்கினையும் சக்கரத்தினையும் தாமரை போன்ற கைகளில் தாங்கி, செங்கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால் - சிவந்த கண்களையுடைய சிங்கமாகிய சினம் பொருந்திய விடைமீது நின்றாய், கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து - கங்கையினைச் சடைமுடியின்கண் அணிந்த நெற்றிக் கண்ணையுடையோனது இடப் பாகத்து, மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் - பெண்ணுருவாகி வேதங்கள் போற்ற நிற்பாய் இஃதென்ன மாயமோ ;

        அரிமான் ஊர்தியென்பார் விடையென்றார் ; விடையும் ஊர்தி யாகலின். இவை மூன்றும் முன்னிலைப் பரவல்.