2. வேட்டுவ வரி


15

மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கின ரெயினரும்


14
உரை
15

       மறக் குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் - மறக்குடியிற் பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர் குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர் ;

       வழிவளம் - வழிப்போவாரைப் பறிக்கும் வளம். மறக்குடித் தாயத்து எயினர் அடங்கினர் என்க. இனி, தாயத்து வழிவளம் என்பதற்குத் தாயமாகிய வழிவளம் எனலுமாம் ; ஈண்டு அத்து அல்வழிக்கண் வந்ததென்க. இது முன்னிலைப் புறமொழி.