"பொருள் கொண்டு....செய்குவாய்" பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும்
அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய் - வழிப்போவார் பொருளைப் பறித்துக்கொண்டு
அவர்க்குத் துன்பம் செய்தல் அல்லது எவரிடத்தும் கருணை இல்லாத வேட்டுவர் இடும் பலிக்கடனை
உண்பாயாக ; மருதின் நடந்து - இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து,
நின் மாமன் செய் வஞ்ச உருளும் சகடம் உதைத் தருள் செய்குவாய் - நின் மாமனாகிய
கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டுவரும் சகடத்தை உதைத்தருளினாய் ;
அல்லதை - ஐ சாரியை. "சுடரொடு
திரிதரும்" என்பது முதல் ஆறுதாழிசைகளும் கொற்றவையைப் பரவுவார் வார்த்தை என்பர்
அரும்பதவுரையாசிரியர். 1"மறவர், பொருள்கொண்டு புண்செயினல்லதை யன்போ, டருள்புற
மாறிய வாரிடை யத்தம்" என்பது பாலைக் கலி. றிற்று.
|