2. வேட்டுவ வரி

20

இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்



20
உரை
21

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத் தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் கருதிய பகைஞர் தலையைத் தாம் அறுத்திட்டு எண்ணுவதல்லது பகைவர் கருதுவது முடிவு போகாமைக்குக் காரணமாகிய மறவரது பழைய குடிக்கண் பிறந்த குமரியை ;

தம் வன்மையாற் பிறரை அழித்தற் குரியரே யன்றிப் பிறர் தம்மை அழித்தற் குரியர் அல்லர் என்பதாம். சுட்டு - கருத்து. இனி, தலைகள் அரிந்து வைக்கப் பிறரால் எண்ணப்படுமதல்லது நோயாற் செத்துச் சுடப்பட்டுப் போகாத குடி எனலுமாம்.