3. புறஞ்சேரியிறுத்த காதை

வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து

38
உரை
39

     வரி நவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து - வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய, புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து - முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து ;

    
வரி - ஈண்டுக் காமங் கண்ணிய இசைப் பாட்டு. மறைநூல் - வேத வொழுக்கம். புரிநூல் மார்பர் என்றது அவர் பிறப்பினாற் பார்ப்பன ரென்பதை அறிவியாநிற்பது அஃதொன்றுமே யென்ற படி.

    
[அடி. புக்கென்னாது சேர்ந்தென்றதனால், அந்தப் பார்ப்பார் இழுக்கிய வொழுக்க முடைமை தமது சாவக நோன்புக் கேலாமையின், ஊர்க்கயலதோர் நகரிற் கோயிற்பக்கத்திற் சேர்ந்தா ரென்க.].