|
45
|
காதலி தன்னொடு
கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
|
|
காதலி
தன்னொடு கானகம் போந்ததற்கு-தன்காதலி யோடு காட்டின்கண் போந்த அதனுக்கு, ஊது உலைக்
குருகின் உயிர்த்தனன் கலங்கி உள் புலம்பு உறுதலின் உருவம் திரிய - கொல்லன் உலையில்
ஊதும் துருத்தி போலப் பெருமூச்சு எறிந்து உள்ளம் கலங்கித் தனிமையுற்று நிறம் வேறுபடலான்,
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் - கௌசிகன் தன் கண்பார்வையின் மயக்கத்தால்
தெளியானாய் ;
போந்ததற்கு
- போந்தமை நிமித்தமாக. உள் கலங்கியென மாறுக. உருவம் திரிந்தமைக்குக் காதலியொடு
கானகம் போந்தமையும் உள்ளங் கலங்கியமையும் காரணங்களாம். உலைக் குருகு - வெளிப்படை.
உயிர்த்தனன் - முற்றெச்சம். கௌசிகன் - பெயர்; குடிப்பெயருமாம்.
தெளிதற்பொருட்டுக்
கூறுகின்றான் :-- . |
|