3. புறஞ்சேரியிறுத்த காதை



50
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்திக்
கோசிக மாணி கூறக் கேட்டே


48
உரை
53

     கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய - கோவலன் தன்னை விட்டுப் பிரிதலானே மிக்க துன்பத்தினை அடைந்த, மாமலர் நெடுங்கண் மாதவி போன்று - கரிய நெய்தல் மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவியைப் போல, இவ்வருந்திறல் வேனிற்கு அலர் களைந்து - இப் பொறுத்தற்கரிய வெம்மையினையுடைய வேனிற் காலத்து வெயிலால் அலரைப் பொறாது, உடனே-அப்பொழுதே, வருந்தினை போலும் மாதவி- மாதவியே நீ துன்பமுற்றனையோ, என்று ஓர் பாசிலைக்குருகின் பந்தரில் பொருந்தி - என ஓர் பசிய இலைகளையுடைய குருக்கத்தி படர்ந்த நிழலினையுடைய இடத்தில் சேர்ந்து, கோசிக மாணி கூறக் கேட்டே - பிரமச்சாரியாகிய கௌசிகனென்ற மறையவன் சொல்லக் கோவலன் கேட்டு ;

     
அலர் களைதலை முன்னர் மாதவிக்குங் கூட்டுக. அலர்களைதல் - பழிச்சொல் பொறாமை, மலர்களை நீக்குதல். பந்தர் - நிழல். வேனிற்கு - வேனிலான்; உருபுமயக்கம். பந்தரில் பொருந்தி வருந்தினை போலும் என்று கூறக் கேட்டு என்க.