3. புறஞ்சேரியிறுத்த காதை


55
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்

54
உரை
55

     யாது நீ கூறிய உரை ஈது இங்கு என - நீ இவ்விடத்துக் கூறிய இவ் வுரையின் பொருள் யாது என்று கேட்ப, தீது இலன் கண்டேன் எனச் சென்று எய்தி - கோவலன் தீங்கின்றியுளன் அவனை யறிந்தேன் எனக் கருதி அவனைச் சென்று அடைந்து

     ஈது உரை என்க. தீது இலன் - ஐயமுடையேன் அல்லேன் என்பாருமுளர்.