3. புறஞ்சேரியிறுத்த காதை


60
இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றந் துயர்க்கடல் வீழ்ந்ததும்


59
உரை
60

     இன் உயிர் இழந்த யாக்கை என்ன - இனிய உயிரினை இழந்த உடம்புபோல, துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் - நெருங்கிய சுற்றத்தார் துன்பக்கடலில் ஆழ்ந்ததும்;

     உயிரிழந்த யாக்கை செயலறுதலோடு ஒருகாலைக் கொருகால் அழகழியுமாறுபோல இச் சுற்றமும் செயலறுதலோடு துன்பமீக் கூர்தலின் தம் உடல் இயல்பு அழியப்பெற்றனர் என்க. "1இன்னுயிரிழந்த யாக்கையி னிருந்தனள்" என்பதுங் காண்க.

1. மணிமே. 7 . 133.