|
|
ஏவ லாளர்
யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
|
|
ஏவலாளர்
யாங்கணும் சென்று - பணியாளர் எத் திசைக்கண்ணும் சென்று, கோவலன் தேடிக்கொணர்கெனப்
பெயர்ந்ததும் - கோவலனைத் தேடிக் கொண்டு வருவீராக என்று மாசாத்துவான் கூற அவர்கள்
சென்றதும் ;
ஏவலாளர் - விளி. 1"மெல்லெழுத்து
மிகுவழி" என்ற சூத்திரத்து 'அன்ன பிறவும்' என்பதனால், கோவலற் றேடி என உயர் திணைப்பெயர்
இரண்டாம் வேற்றுமைக்கண் திரிந்து முடிந்தது. "கொணர்கெனப் போந்ததும்" என்பதும் பாடம்.
1. தொல். எழுத்து. 157.
|
|