|
|
கடுங்கதிர்
வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
|
|
கடுங்
கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்-இவ் வழக்கினையுடைய கண்ணகி கடிய ஞாயிற்றின்
வெம்மையைப் பொறுக்கலாற்றாள், படிந்தில சீறடி பரல் வெங் கானத்து - பருக்கைக் கற்களையுடைய
கொடிய காட்டு வழியில் இவள் சிறிய அடிகளும் படிந்தில ;
சீறடி படிந்தில என்றது கால் கொப்புளங் கோடலின்.
அடி நன்கு மிதித்து நடவாமை கூறியவாறு. 'பரல்வெங் கானம்' என்பதனைப் பின் வரும் அடிகளொடும்
கூட்டுக. |
|