3. புறஞ்சேரியிறுத்த காதை



65
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்



63
உரை
66

     பெருமகன் ஏவல் - தலைவன் ஏவிய பணிவிடையைச் செய்தலே உயர்ந்த பொருளாகும், அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று - யாண்டும் அங்ஙனமன்றாகிய அரசாட்சியும் எண்மைப் பொருட்டாம் என்று கருதி, அருங் கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல - கடத்தற்கரிய காட்டினை அடைந்த இராமன் பிரியலுற்ற அயோத்தியைப் போல, பெரும் பெயர் மூதூர் பெரும்பேதுற்றதும் - பெரிய புகழினையுடைய பழமையாகிய காவிரிப்பூம்பட்டினத்துள்ளார் மிகவும் அறிவு மயங்கியதும் ;

     பெருமகன் - தயரதன். தஞ்சம் - எண்மை. அருந்திறல் - அரிய திறலுடைய இராமன் ; ஆகுபெயர். பேதுறவு - அறிவின் றிரிவு.