|
75
|
தாழ்துய ரெய்தித்
தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
|
|
இருந்துயர் உற்றோள் - மிக்க துன்பமுற்றவளாகிய
மாதவி, இணை அடி தொழுதேன் வருந்த துயர் நீக்கு என - நினது இரண்டு அடிகளையும் வணங்கினேன்
எனக்கு வந்த துன்பத்தினைப் போக்குவாய் என்று சொல்லி, மலர்க்கையின் எழுதி - மலர்போன்ற
தன் கைகளால் எழுதி, கண்மணி அனையாற்குக் காட்டுக என்றே - என் கண்ணின் கருமணிபோல்வானுக்குக்
காட்டுக என்று சொல்லி, மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் - இலாஞ்சனை யையுடைய திருமுகத்தை
அவள் தந்ததும் ;
'
இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென'
என்றது, கொண்டு கூறல். திருமுகம் எழுதிச் சுருட்டி அதன்மீது மண் இலாஞ்சனை இடுதல் மரபாகலான்
'மண்ணுடை முடங்கல்' என்றார். உற்றோள் மாதவி எழுதி ஈத்ததும் என்க.
. |
|