|
80
|
வழிமருங்
கிருந்து மாசற வுரைத்தாங்
கழிவுடை யுள்ளத் தாரஞ ராட்டி
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
|
|
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து
- நெறியின் பக்கத்தே தங்கிக் குற்றமறச் சொல்லி, ஆங்கு அழிவு உடை உள்ளத்து ஆர்
அஞராட்டி - அவ்விடத்து அழிந்த உள்ளத்தையும் மிக்க காம நோயையும் உடையளாகிய, போது
அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கை மாதவி ஓலை மலர்க்கையின் நீட்ட - மலர் விரிந்த
புரிந்த கூந்தலையுடைய பூங்கொடி போன்ற நங்கையாகிய மாதவி தந்த ஓலையைக் கோவலன் கையிலே
கொடுக்க ;
மாசு
அற உரைத்து என்றது நிகழ்ந்த நிகழ்ச்சியினை உள்ளவாறே உரைத்து என்றவாறு. ஆர் அஞராட்டியாகிய
மாதவி என்க.
. |
|