|
|
தாதுசேர்
கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையற் பூவணை பொருந்தி
|
|
ஆங்குத்
தாது சேர் கழுநீர் சண்பகக் கோதையொடு - பூம் பொடி பொருந்திய கழுநீர் மலரும் சண்பக
மலரும் என்னும் இவற்றானாய மாலையொடு, மாதவி மல்லிகை மனை வளர் முல்லைப் போது விரிதொடையல்
பூ அணை பொருந்தி - குருக்கத்தியும் மல்லிகையும் மனைக்கண் வளர்க்கப் பெற்ற முல்லையுமென்ற
இவற்றின் விரிந்த மலர்களால் தொடுத்த மாலையையும் உடைய மலர் அணைக்கண் பொருந்தி
;
ஆங்கு
- ஆசை ; அப்பொழுது என்றலுமாம். பூ அணை - பொலிவினையுடைய அணை யென்றுமாம். முல்லை மனையில்
வளர்வதனை 1"இல்லெழு முல்லையொடு மல்லிகை
மயங்கி" என்பதனாலும் அறிக.
1.
பெருங், 1, 33 : 73.
|
|