|
|
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
|
|
மீளா
வென்றி வேந்தன் சிறப்பொடு - வெற்றி தன்னினின்றும் மீளப் பெறாத அரசனாற் பெற்ற
சிறப்புடனே, வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் - வாள்வீரர் தத்தம் வீரத்திற்கு நாட்
காலையில் எடுத்த முரசு முதலியவற்றின் அழகிய ஓசையும் ;
சிறப்பொடு எடுத்த முழவம் என்றது அரசன்பால் வரிசையாகப்
பெற்ற முழவம் என்றபடி. நாள் - காலை. நாள் - குடை நாட்கோள் முதலியவுமாம்.;
|
|