3. புறஞ்சேரியிறுத்த காதை

 

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்



143
உரை
144

     மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு - வெற்றி தன்னினின்றும் மீளப் பெறாத அரசனாற் பெற்ற சிறப்புடனே, வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் - வாள்வீரர் தத்தம் வீரத்திற்கு நாட் காலையில் எடுத்த முரசு முதலியவற்றின் அழகிய ஓசையும் ;

     சிறப்பொடு எடுத்த முழவம் என்றது அரசன்பால் வரிசையாகப் பெற்ற முழவம் என்றபடி. நாள் - காலை. நாள் - குடை நாட்கோள் முதலியவுமாம்.;