3. புறஞ்சேரியிறுத்த காதை

தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்



171
உரை
173

    தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்-கண்ண கிக்கு மேல்வரும் துன்பத்தினைத் தான் முன்னரே அறிந்தாள் போல, புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து - தூய்மையுடைய நறிய பூக்களாகிய ஆடையால் தன் மெய்ம்முழுதும் போர்த்து, கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி - தன்கண் நிறைந்த மிக்க நீரினை மறைத்து உள்ளடக்க ;

    புண்ணிய நறுமலர் - தன்னைக்கொண்டு அருச்சிப்பார்க்குப் புண்ணியங்களைக் கொடுக்கும் நறிய பூ என்றுரைப்பாருமுளர்.
கண்ணிறை நெடுநீர் என்பதற்குத் தன்னிடத்து நிறைந்த நீர் எனவும் கண்களில் நிறைந்த நீர் எனவும் பொருள் கொள்க. அடக்கி - அடக்க வெனத் திரிக்க. கரந்தனள் அடக்குதல் இவர் நீர் மிகுதி கண்டு வெருவாதிருத்தற்பொருட்டென்க.