|
|
பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
|
|
பரிமுக
அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பி யும் அருந்துறை இயக்கும் - அரிய துறையிலே செலுத்தும்
குதிரைமுக ஓடமும் யானைமுக ஓடமும் சிங்கமுக ஓடமுமாகிய இவற்றினேறி, பெருந்துறை மருங்கின்
பெயராது - பலரும் செல்லும் பெரிய துறைப்பக்கத்தே செல்லாது, ஆங்கண் மாத வத்தாட்டியொடு
மரப்புணை போகி - அதற்கு அயலிலுள்ள சிறிய துறையில் கவுந்தியடிகளுடனே மரப்புணையில் சென்று,
தே மலர் நறும்பொழில் தென்கரை எய்தி - தேன் பொருந்திய மலர்களையுடைய நல்ல சோலை
நிறைந்த தெற்குக் கரையினை அடைந்து ;
அருந்துறை - ஓடக்கோல் நிலைத்தலரிய துறை. ஓடத்தில் பல ரும்
ஏறுவாராகலான் தாங்கள் மூவரும் தனியே கட்டுமரப் புணையில் சேர்ந்தனர் என்க; என்னை?
முன்னர், "வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு" சாப முறுதலின். ;
|
|