3. புறஞ்சேரியிறுத்த காதை


வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்



181
உரை
183

        வானவர் உறையும் மதுரை வலங் கொள - தேவர்கள் உறையும் மதுரை நகரத்தினை வலங் கொண்டால், தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று - மிகவும் அறமுண்டாம் என்று கருதி, ஆங்கு அருமிளை உடுத்த அகழி சூழ்போகி - அவ் விடத்தே, அழித்தற்கரிய காவற்காடு சூழ்ந்த அகழியைச் சுற்றிப் போய் ;

        நனி பெரிது, ஒருபொருட் பன்மொழி, தான், அசை, மிளை - கட்டுவேலியுமாம்.