|
|
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
|
|
கருநெடுங்
குவளையும் ஆம்பலும் கமலமும் - கரிய நெடிய குவளையும் அல்லியும் தாமரையும், தையலும் கணவனும்
தனித்து உறுதுயரம் - கண்ணகியும் அவள் கணவன் கோவல னும் பிரிந்து அடையும் துன்பத்தினை,
ஐயம் இன்றி அறிந்தன போல - ஐயப்பாடு சிறிதும் இன்றி உணர்ந்தன போல, பண்நீர் வண்டு
பரிந்து இனைந்து ஏங்கி - வண்டுகள் பாடும் பண்ணீர் மையால் வருந்தி ஏக்கமுற்று அழுது,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க - கண்ணீரைக்கொண்டு கால் பொருந்த நடுங்க ;
குவளை முதலியவற்றில் வண்டுகள்
ஒலித்தல் இவர்க்குறு துயரங் கண்டு அக் குவளை முதலியன அழுதல்போன்றிருந்தன என்க. கண்ணீர்
- கண்ணின்நீர், கள்ளாகிய நீர் எனவும், கால் உற நடுங்க - கால்கள் மிக நடுங்க, காற்றால்
மிக அசைய எனவும் இரு பொருள் படுமாறறிக. |
|