3. புறஞ்சேரியிறுத்த காதை



35
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடை கழிந்து


33
உரை
35

     தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி - வளைந்த வளையலை அணிந்த கண்ணகியின் சிவந்த கையினைத் தன் தோளின்மீது சார்த்தி, மற உரை நீத்த மாசு அறு கேள்வி-பாவ மொழிகளின் நீங்கிய குற்றமற்ற கேள்வியினையுடைய கவுந்தியடிகளின், அறவுரை கேட்டு ஆங்கு ஆர்இடை கழிந்து-அறவுரைகளைக் கேட்டு அதனாலே கடத்தற் கரிய வழியைக் கடந்து ;

    
தொடி - வளைவு. தோளிற் காட்டி - தோளிலே தோன்றச் செய்து. கேள்வி - கேள்வியை உடைய கவுந்தியடிகள் ; ஆகு பெயர். ஆங்கு - அவ்வாறு ; அசையுமாம்.